search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடிக்கல் நாட்டு விழா"

    • வேலூர் எம்.பி.கதிர்ஆனந்த் அடிக்கல் நாட்டினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    காட்பாடியில் கூட்டுறவு நகரமைப்பு சங்கம் சார்பில் வணிக வளாகம் கட்ட ரூ.85.59 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    வணிக வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. கூட்டுறவு சங்க தலைவர் ஜெயராமன் மற்றும் செயலாளர் மனோகரன் ஆகியோர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த் கலந்து கொண்டு அடி நாட்டினார்.

    நிகழ்ச்சியில் 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா, பகுதி செயலாளர்கள் வன்னிய ராஜா, பரமசிவம், கூட்டுறவு சங்க இயக்குனர்கள் கே.எஸ் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தென்கரைப் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளும் திட்டப் பணியின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • பேரூராட்சி அலுவலர்கள், தி.மு.க நிர்வாகிகள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.12.40 கோடி மதிப்பீட்டில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் தென்கரைப் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளும் திட்டப் பணியின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணகுமார் கலந்து கொண்டு பூமிபூஜையுடன், அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், பேரூராட்சிதுணைத் தலைவர் ராதாராஜேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் மோகன்குமார், தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, துணைத்தலைவர் மலர்கொடி, பணி நியமனக்குழு தலைவர் பாலாமணி பழனி முருகன், நேசம் தொண்டு நிறுவனர் முருகன், தி.மு.க நிர்வாகிகள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

    • ஓசூரில் 3 கோடியே 5 லட்சம் மதிப்பில் கால்நடை பன்முக மருத்துவமனை கட்டிடம் அமைக்கப்பட வுள்ளது.
    • இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், ஓசூரில் 3 கோடியே 5 லட்சம் மதிப்பில் கால்நடை பன்முக மருத்துவமனை கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.

    மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, 24-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மஞ்சம்மா, மற்றும் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை ஊராட்சியில் உள்ள அ.கட்டுபடி கிராமத்திற்கு செல்லும் தார் சாலை கடந்த சில மாதங்களாக பழுதடைந்து காணப்பட்டது. குண்டும், குழியுமாக கிடந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி சாலை அமைக்க ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    ஒன்றிய குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், துணை தலைவர் கஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் தேவிசிவா, ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், ஒன்றிய கவுன்சிலர்கள் சீனிவாசன், வேலாயுதம், துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி துணை தலைவர் தென்போஸ்கோ வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். 

    • பூமி பூஜை நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சியில் முத்தனப்பள்ளி, மல்லப்பள்ளி மற்றும் ஏரியூர் ஆகிய பகுதிகளில் புதியதாக ரேசன் கடை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

    விழாவிற்கு ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யா சதிஷ்குமார் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதிஷ்குமார் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக தேவராஜி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

    இதேபோல் நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி, நாயனசெருவு, வெள்ளநாயாக்கனேரி, பச்சூர், கொண்டகிந்தனப்பள்ளி ஆகிய பகுதிகளில் - அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்கும் பணியினையும் க.தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் வெண்மதி முனிசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.சாமுடி, பொதுக்குழு உறுப்பினர் கே.சாம்மண்ணன், கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.அசோக்குமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர் எம்.சிங்காரவேலன், மு.மாவட்ட தொண்டரணி து.அமைப்பாளர் எஸ்.ராஜா, உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.
    • 147 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பேரூராட்சியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள், தார்சாலை புதுப்பித்தல் பணி, சிமெண்ட்சாலை அமைக்கும் பணி, மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணிகள், பேருந்து நிலைய பராமரிப்பு பணி ஆக மொத்தம் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில் அடிக்கல் நாட்டினார்.

    தமிழ்நாடு முதல் அமைச்சர் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் இன்றைய தினம் மாரண்டஅள்ளி பேரூராட்சியில் கலைஞரின் நகர்புர மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மின்கலத்தில் இயங்கும் ரூ.6.6 லட்சம் மதிப்பிலான 3 குப்பை சேகரிக்கும் வாகனங்களின் பயன்பாடுகளை தொடங்கி வைத்தும், வார்டு எண் 15 மாரப்பன் தெரு புதுகாலனி, வார்டு எண் 12 சுண்ணாம்புகார தெரு, வார்டு எண் 13 சந்தை தெரு, வார்டு எண் 10 ஆணைகிணற்று தெரு, வார்டு எண் 3 பஞ்சப்பள்ளி சாலை குறுக்கு தெரு, வார்டு எண் 1 கொரவாண்டஅள்ளி குறுக்குத் தெருக்களில் தார்சாலைகள் அமைப்பதற்காக ரூ.96.50 லட்சம் மதிப்பீட்டிலும்,

    மாரண்டஅள்ளி பேரூராட்சியில் நகர்புற சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ், வார்டு எண்.14 காந்திநகரில் தார்சாலை புதுப்பித்தல் பணி, வார்டு எண்.3 செவத்தியம்பட்டி மேற்கு, வார்டு எண்.3 செவத்தியம்பட்டி கிழக்கு, வார்டு எண்.7 யாதவர் தெரு, வார்டு எண்.8 தாண்டவ உடையார்தெரு, வார்டு எண்.10 முத்து உடையார் தெரு, வார்டு எண்.09 அக்ரஹாரத்தெரு, வார்டு எண்.10 ஆணங்கிணற்று தெரு, வார்டு எண்.10 பிள்ளையார் கோவில் தெரு, வார்டு எண்.12 சுண்ணாம்புக்காரத்தெரு, வார்டு எண்.07 பழைய பஸ் ஸ்டாண்ட் சிமெண்ட்சாலை ஆகிய பணிகளுக்கு ரூ.42.75 லட்சம் மதிப்பீட்டிலும்,

    என மாரண்டஅள்ளி பேரூராட்சியில் மொத்தம் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.

    இதனைத் தொடர்ந்து ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் 47 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களும், வருவாய் துறையின் மூலம் 50 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகைக்கான உத்தரவு ஆணைகளும், இருளர் இனத்தைச் சேர்ந்த 28 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களும், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு ஆடு, மாடு கொட்டகை அமைத்திட உத்தரவு ஆணைகளும் என மொத்தம் 147 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.

    இதில் மாவட்ட செயலாளர்கள் பழனியப்பன், தடங்கம் சுப்பிரமணி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் ராஜகுமாரி மணிவண்ணன், மணி, ஒன்றிய செயலாளர்கள் பி.கே அன்பழகன், முனியப்பன், முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம், வக்கீல் முருகன், சூடப்பட்டி சுப்பிரமணி, பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி கே முரளி, மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் எம் ஏ வெங்கடேசன் துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம், கவுன்சிலர்கள், சத்யா சிவகுமார், வெங்கடேசன், யதிந்தர், கார்த்திகேயன், ரீனா, கீதா, லட்சுமி, அபிராமி, மற்றும் கட்சி நிர்வாகிகள் கிளை கழக செயலாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 89 வீடுகளுக்கு ரூ.5.64 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • ஒன்றிய செயலாளர் சந்தானம், மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி நல்லா கவுண்டம்பாளையம் கிராமத்தில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 89 வீடுகளுக்கு ரூ.5.64 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாதப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பா.ஜ.க. விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வக்கீல் குமார், பா.ஜ.க. திருப்பூர் மாவட்ட பொதுச் செயலாளர் கே. சி. எம். பி. சீனிவாசன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் லோகு பிரசாத்,பா.ஜ.க.மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ்குமார், மாவட்டத் துணைத் தலைவர் வினோத் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர் சந்தானம், மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று தொடங்கி வைத்தார்
    • நகர்மன்ற தலைவர் நசீர் தலைமை தாங்கினார்

    கன்னியாகுமரி :

    குளச்சல் நகராட்சியில் காமராஜர் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தை இடித்து விட்டு முற்றிலும் புதிய பஸ் நிலையம் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.

    புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் நசீர் தலைமை தாங்கினார். ஆணையர் விஜயகுமார், துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், வார்டு கவுன்சிலர் குறைசா பீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டும் பணியை தொடங்கி வைத்தார். விழாவில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேயர் மகேஷ், ஒன்றிய செயலாளர்கள் பி.எஸ்.பி. சந்திரா, எப்.எம்.ராஜரத்னம், ரமேஷ்பாபு, நகர செயலாளர் நாகூர்கான், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டிஉதயம், கவுன்சிலர்கள் ஜெயந்தி, கோமளா, ஆறுமுகராஜா, மேரி, நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர், அ.தி.மு.க. நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், விசைப்படகு சங்க செயலாளர் பிராங்கிளின், வெள்ளிச்சந்தை ஊராட்சி தலைவர் தாமஸ் கென்னடி உள்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நடந்த பூமி பூஜையில் அஞ்சாலியம்மன் கோவில் சுடலை மாடசுவாமி குருக்கள் மகேந்திரன், குளச்சல் ஆலிம் அப்துல்ரகுமான், கொட்டில்பாடு பங்குத்தந்தை ராஜ் ஆகியோர் பிரார்த்தனை செய்தனர்.

    • தமிழகத்தில் நீதித்துறை கட்டமைப்பு பிற மாநிலங்களை காட்டிலும் மேம்பட்டதாக உள்ளது.
    • புதிய நீதிமன்றங்களுக்கேற்ப தேவையான நீதிபதிகளை நியமிக்க போதிய நிதி ஒதுக்கியுள்ளோம்.

    மதுரை:

    மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு-செசன்சு கோர்ட்டு தொடக்க விழா மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இன்று நடந்தது.

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட், மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். விழாவிற்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு மற்றும் செசன்சு கோர்ட்டுகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.

    மயிலாடுதுறை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ தொடங்கி வைத்தார். விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜா வரவேற்று பேசினார். அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் பாராட்டி பேசினர்.

    மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ, அமைச்சர்கள் ரகுபதி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சுந்தரேஸ், ராம சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் நன்றி கூறினார்.

    மதுரை கோர்ட்டில் நடந்த கூடுதல் கட்டிடங்கள் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழகத்தில் நீதித்துறை கட்டமைப்பு பிற மாநிலங்களை காட்டிலும் மேம்பட்டதாக உள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழில் வழக்காடும் நிலை வரும். தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதன் வாயிலாக வழக்குகளை விரைவாக முடிக்க முடியும்.

    நீதித்துறை கட்டமைப்பில் தி.மு.க.அரசு தொலைநோக்குடன் செயல்படுகிறது. புதிய நீதிமன்றங்களுக்கேற்ப தேவையான நீதிபதிகளை நியமிக்க போதிய நிதி ஒதுக்கியுள்ளோம். 3 மாவட்ட நீதிமன்றம் உள்பட 44 நீதிமன்றம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்ட கல்லூரியை பழமை மாறாமல் புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புதிதாக பதிவு செய்த 1000 இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி கடைபிடிக்க வேண்டும். வழக்கறிஞர்களுக்கு சேமநல நிதியை ரூ.7 லட்சமாக இருந்தது. அது ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பேசியதாவது-

    மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்ற வளாகம் ரூ.166 கோடிக்கு தொடங்கப்பட உள்ளது. 2 கீழ் தளம், தரைதளம், முதல் தளம், 2-ம் தளம், 3-ம் தளம் என கட்டப்பட உள்ளது. தமிழ் வளர்ச்சிக்கு மிகப்பெரிய இடமாக மதுரையே இருந்துள்ளது. சிலம்பதிகாரத்தில் சட்டம் பற்றி 2 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு கூறப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பேற்ற பின் நீதித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றம் முழுவதும் ஆன்லைன் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மனுதாக்கல் உருவாக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் 10 மொழியாக்கம் செய்ய உத்தரவிட்டது. அதில் சென்னை ஐகோர்ட்டு ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழியாக்கத்தில் முதலிடத்தில் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஸ் பேசுகையில், "உலகில் எந்த பகுதியிலும் நடக்காத ஒரு சம்பவம் மதுரையில் நடந்தது. அதன் மூலம் கண்ணகி மதுரையில் நீதியை பெற்றுள்ளார். மன்னர் தவறாக நீதி வழங்கக்கூடாது என்பதற்கான நிகழ்வு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நடந்துள்ளது" என்றார்.

    உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியம் பேசியதாவது:-

    மதுரை 3 விசயங்களுக்கு பெருமை வாய்ந்தது. முதல் விசயம் பெண்களை அதிகாரப்படுத்துவது. மதுரையில் மட்டுமே பெண்ணிடம் இருந்து ஆணுக்கு சக்தி கிடைக்கிறது. மற்ற நகரங்களில் ஆண்களிடம் இருந்து சக்தி கிடைக்கும்.

    இரண்டாவது தமிழ் இலக்கியம் வளர்த்த நகரம் மதுரை.

    சமண முனிவர்கள் நாலடியார் என்ற சங்க இலக்கியத்தை கொடுத்த ஊர் மதுரை. மேலும் மதுரை தூங்கா நகரமாக உள்ளது. மூன்றாவது மதுரை கோவில் நகரமாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • செம்பாவள்ளத்தில் சுமார் 350- க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
    • ஊத்துக்குளி ஆர்.எஸ்.நியாய விலைக் கடையில் ரேஷன் பொருட்கள் வாங்கி பயன் பெற்று வருகிறார்கள்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியம், மொரட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட செம்பா வள்ளத்தில் சுமார் 350- க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்கள் தற்போது 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊத்துக்குளி ஆர்.எஸ்.நியாய விலைக் கடையில் ரேஷன் பொருட்கள் வாங்கி பயன் பெற்று வருகிறார்கள். ஆகவே இப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் ஒரு ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்று ஊராட்சித் தலைவர் என்.பிரபுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தலைவர் பிரபு ரூ.4,80,000 மதிப்பீட்டில் பகுதி நேர புதிய ரேஷன் கடை கட்ட உத்தரவிட்டார்.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் ஊராட்சி தலைவர் பிரபு, ஊராட்சி செயலாளர் சாமிநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர் கலைவாணி தங்கராஜ், செம்பாவள்ளம் பட்டக்காரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • நூலக கட்டுமான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம், பூதலூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பேரூராட்சிகள் துறை சார்பில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினாா். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ.க்கள் துரைசந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் பூதலூர், திருவையாறு, தஞ்சாவூர் ஒன்றியங்களைச் சார்ந்த 214 ஊரக குடியிருப்புகளுக்கு அதில் வசிக்கும்
    2 லட்சத்து 25 ஆயிரத்து 453 மக்கள் பயன்பெறும்வகையில் ஜல் ஜீவன் மிஷின் திட்டத்தின் கீழ் ரூ. 248.67 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, மேல திருப்பந்துருத்தி ஆகிய பேரூராட்சிகளில் நூல் நிலைய புதிய கட்டிட பணிகள், திருக்காட்டுப்பள்ளி மற்றும் திருவையாறு புதிய நவீன பஸ் நிலையங்கள் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டி தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, மேலதிருப்பந்துருத்தி, நூலக கட்டுமான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. இடம் தேர்வு செய்து கொடுத்த உடன் பணிகள் தொடங்கும்.

    திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்துக்கு இடம் தேர்வு செய்து கொடுத்தவுடன் பணிகள் தொடங்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கடந்த 20 மாதத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு குடிநீர் திட்டங்களுக்கு ரூ.38 ஆயிரத்து 801 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

    கோவை, சேலம், திருநெல்வேலி, சங்கரன்கோ வில், புளியங்குடி, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டங்கள் தீட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இன்று அடிக்கல் நாட்டப்படும் குடிநீர் திட்டப்பணிகள் 2024 ஆகஸ்டு மாதத்தில் முடிக்கும் வகையில் திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    திருவையாறு பேரூராட்சியை நகராட்சியாக்க வேண்டும் என்று கூறினார்கள்.

    இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் இருந்து எந்த கோரிக்கை வந்தாலும் அதை நிறைவேற்றுவதற்கு எதுவும் தடையாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பொன்னகரத்தில் ஆதிகேசவ பெருமாள் கோவில் ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
    • விழாவில் பொன்னகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அறந்தாங்கி:

    மணமேல்குடி தாலுகா பொன்னகரம் மீனவ கிராமத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தென் திருப்பதி என்றழைக்கப்படும், மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் இராஜகோபுரம் கட்டுவதற்கு அப்பகுதி கிராம மக்கள், ஊர் முக்கியஸ்தர்களால் தீர்மானிக்கப்பட்டது. ராஜகோபுரம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளரும், மணமேல்குடி ஒன்றியக்குழுத் தலைவருமான பரணி கார்த்திகேயன் அடிக்கல்நாட்டி கோபுர கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.விழாவில் பொன்னகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அடிக்கல் நாட்டு விழாவிற்கு பின்னர் அன்னதானம் நடைபெற்றது.

    ×